இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் கோல்டன் ஜோடியான ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனேவும் மீண்டும் இணைந்துள்ள படம் ''தமாஷா''. இப்படம் இந்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில், இப்படம் பற்றி இருவரும் என்ன சொல்கிறார்கள், அவர்களுக்கு இடையேயான உறவு எப்படிப்பட்டது என்று அவர்களே சொல்கிறார்கள், இதோ...
தமாஷா படத்தில் உங்களுக்கு எந்த மாதிரியான கேரக்டர்.?
ரன்பீர் : இந்தப்படத்தில் எனது கேரக்டர் பெயர் வெட். தான் விரும்பியபடி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ணுகிறார், ஆனால் குடும்ப சூழலும், சமுதாயமும், அவனை பிறர் இஷ்டப்படி வாழ வைக்கிறது. இந்தச்சூழலில் தாரா எனும் தீபிகாவை சந்திக்கிறான். அப்போது முதல் அவனது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. ஏனென்றால் தாரா தான், வெட்டிற்கு இன்ஸ்பரேஷன். வாழ்க்கையை அவரவர் விருப்பப்படி வாழ வேண்டும், பிறருக்காக வாழக்கூடாது என்று அறிவுறுத்துகிறார். இந்த ஒரு விஷயம் வெட்-க்கு மிகவும் பிடிக்கிறது.
தீபிகா : தமாஷா படத்தில் நான் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தாராவும், வெட்டும் நல்ல நண்பர்கள், ஒருவரை நேசிப்பவர்கள். அவர்களின் உண்மையான அடையாளத்தை மறைக்க இருவரும் பொய் சொல்கிறார்கள்.
தமாஷா படம் பற்றி சொல்லுங்க.?
ரன்பீர் : என்னை பொறுத்தவரை இன்றைய இளைஞர்களின் இன்ஸ்பரேஷன் தான் இந்த தமாஷா படம் என்பேன். இன்றைய இளைஞர்களுக்கு குடும்பம் முதல் சமூகம் வரை பல்வேறு விதமான பிரச்னைகள் இருக்கிறது. இந்தப்படத்தில் வரும் வெட் கேரக்டரை பார்க்கும் ஒவ்வொரு வரும் தங்களை போன்றே இந்த கேரக்டர் இருப்பதாக உணர்வர். இப்படம் வாழ்க்கை வாழ ஒரு பாடமாக இருக்கும், எந்த ஒருவருக்கும் மன அழுத்தம் தராது.
தீபிகா : ஆமாம், ரன்பீர் சொல்வது உண்மை தான். ஒவ்வொரு வரும் தங்களை தாங்களே உணர்வார்கள். இன்றைய இளைஞர்களின் மனதை மாற்ற இப்படம் ஒரு உந்துதலாக இருக்கும். இந்தப்படத்தில் ரன்பீர், ஒரு நடிகராக வேண்டும் என நினைப்பார், ஆனால் அவரது குடும்பத்திலோ அவரை டாக்டராக்க வேண்டும் என நினைப்பார்கள். தான் நினைத்த வாழ்க்கையை வாழ முடியவில்லையே என்று ரன்பீர் வருந்துவார். ஆனால் எனக்கு அப்படியில்லை, நான் நடிகையாக வேண்டும் என்று என் வீட்டில் சொல்லும்போது, என் மனநிலையை புரிந்து கொண்டு என் குடும்பத்தார் சம்மதம் சொல்வார்கள்.
படத்திற்கு ஏன் தமாஷா என்று பெயர் வைத்துள்ளார்கள்.?
ரன்பீர் : தமாஷா என்றால் பொழுதுபோக்கு என்று பொருள். ஆனால் இங்கு தமாஷா என்பது வெட் - தாராவின் வாழ்க்கை. அவர்களின் கேரக்டர் படி வாழ்க்கையை பிரதிபலிக்கின்றனர்.
தீபிகா : என்னை பொறுத்தவரை தமாஷாவை போன்று வெட் - தாராவின் வாழ்க்கை இருக்கும். பொதுவாக தமாஷாவுக்கு ஒருவிதமான கிரே ஷேடு இருக்கும், ஆனால் இந்தப்படத்தில் எந்தவொரு நெகட்டீவ் விஷயங்களும் இருக்காது. படம் முழுக்க பாசிட்டீவ்வான விஷயங்களை தான் சொல்லும்.
இந்தப்படத்தில் நீங்கள்(ரன்பீர்) மிமிக்ரி எல்லாம் செய்துள்ளீர்கள், அதுப்பற்றி.?
ரன்பீர் : ஆமாம், நான் நடிகர் தேவ் ஆனந்த் போன்று மிமிக்ரி செய்துள்ளேன். படத்திற்கு அது தேவைப்பட்டது. எங்களின் உண்மையான அடையாளத்தை மறைக்க நாங்கள் இருவரும் மூத்த நடிகர்கள் போன்று மிமிக்கிரி செய்துள்ளோம். நிஜத்தில் நான் எந்த நடிகரையும் காப்பி அடிப்பது கிடையாது. தேவ் ஆனந்த் போன்று பேசுவதற்கு நிறைய கஷ்டப்பட்டேன், அத்துடன் நிறைய பயிற்சியும் மேற்கொண்டேன்.
தீபிகா : கதையின் தேவைக்காக நாங்கள் இருவரும் மிமிக்கிரி செய்துள்ளோம். மிமிக்கிரி செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. நாங்கள் அவர்களை போன்று மிமிக்கிரி செய்ய வேண்டும், அதேசமயம் அவர்களை சங்கடப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக இருந்தோம். தேவ் ஆனந்த் போன்று ரன்பீர் மிமிக்கிரி செய்தபோது அவரை மிகவும் பிடித்தது, இப்படியொரு வேலையை செய்யும்போது எனக்கே கொஞ்சம் ஷாக்காக இருந்தது. மிமிக்கிரியின் மாஸ்டர் ரன்பீர்.
ஒரேகாலக்கட்டத்தில் நீங்கள் இருவரும் உங்களது திரைப்பயணத்தை தொடங்கினீர்கள், இப்போது உங்களுக்குள் எந்தமாதிரியான மாற்றம் ஏற்பட்டுள்ளது.?
ரன்பீர் : இந்த எட்டு ஆண்டுகளில் நடிப்பு விஷயத்தில் தீபிகா எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளார். தீபிகாவுடன் நான் மூன்று படங்களில் நடித்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் அவருடன் நடிக்கும்போது நடிப்பில் தன்னை மெருகேற்றி இருப்பார். சினிமாவில் அவரது பயணம் சிறப்பாக உள்ளது, அவரை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். அவருடைய நிஜ வாழ்வும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தீபிகா : ஒரு நபராக ரன்பீர் இடத்தில் நான் எந்த மாற்றத்தையும் காணவில்லை. ரன்பீர் மிகவும் திறமையான, ஸ்மார்ட்டான நடிகர். அவரைப்பார்த்து நான் மிகவும் பொறாமைப்படுவேன். உண்மையில் அவர் என்னை மிகவும் கவர்ந்தவர். நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் நல்ல மதிப்பு வைத்துள்ளோம், எங்களுக்குள் எப்போதும் உண்மை இருக்கும்.
உங்கள் கேரக்டருக்காக உங்களை நீங்கள் எப்படி தயார் செய்வீர்கள்.?
ரன்பீர் : ஒவ்வொரு கேரக்டருக்காகவும் நான் என்னை சோதனைப்படுத்தி கொள்வேன். ஒரே விதமான சாக்லெட் பாயோ அல்லது ரொமான்ட்டிக் ஸ்டார் என்ற அடையாளம் எனக்கு தேவையில்லை. வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் சில படங்கள் தோல்வி அடைவது உண்மை தான். உதாரணமாக பாம்பே வெல்வெட், ராய் போன்ற படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும் வித்தியாசமான வேடங்களுக்காக நான் எப்போதும் என்னை சோதனைப்படுத்தி கொள்வேன்.
தீபிகா : நானும் எனது கேரக்டருக்காக என்னை சோதனைப்படுத்தி கொள்வேன். அதனால் தான் நான் தமாஷா படத்தையும், மறுபுறம் பாஜிராவ் மஸ்தானி போன்ற படத்திலும் நடிக்கிறேன். ஹிட் மற்றும் பிளாப்கள் மட்டும் உங்களது சினிமா வாழ்க்கையை தீர்மானிக்காது. படத்தின் கதை தான் தீர்மானிக்கும். ஏனென்றால் கதை எப்போதும் ராஜா. ஆகையால் நான் எப்போதும் ஹீரோ மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை காட்டிலும் கதைக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன்.
இவ்வாறு ரன்பீர் மற்றும் தீபிகா கூறினார்.