ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
வருடத்திற்கு ஐந்து படங்களாவது நடித்து விடும் மலையாள நடிகர்கள் மத்தியில் தமிழ் நடிகராகவே மாறிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் நாட்டிலேயே முகாமடித்து அமர்ந்துவிட்டார் நரேன். இத்தனைக்கும் 2012ல் இவர் நடித்த 'முகமூடி' படத்துக்கு பின் தமிழில் தற்போதுதான் 'கத்துக்குட்டி' என்கிற படம் வெளியானது. அதேபோல கடந்த 2013ல் மலையாளத்தில் மட்டும் நான்கு படங்களில் நடித்தார். மலையாளத்தில் 2014ல் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தவர், இவரது கேரக்டரும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. தற்சமயம் ஒரே ஒரு படத்தில் தான் நடித்து வருகிறார். ஆனால் எந்தப்படமும் பெயர் சொல்லும்படி ஓடவில்லை.
2006ல் பிருத்விராஜ், ஜெயசூர்யா கூட்டணியில் வெளியான 'கிளாஸ்மேட்ஸ்' படத்தில் நரேனின் கேரக்டரையும் நடிப்பையும் பார்த்தவர்கள், இவர் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என ஆருடம் சொன்னார்கள். ஆனால் இதுவரை சின்ன ரவுண்டு கூட வரமுடியாத நிலையில் தான் இருக்கிறார் நரேன்.. சரியான படங்களை தேர்ந்தெடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு தான் இவர் மீது முன்வைக்கப்படுகிறது. ஆக, தமிழ், மலையாளம் இரண்டில் எது ஒன்றிலும் அழுத்தமாக காலூன்ற முடியாமல் தவிக்கும் நரேனுக்கு மலையாள திரையுலகமும் கைகொடுக்காதது தான் வேதனையான விஷயம்.