சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
மேலே சொன்னது நிச்சயமாக சம்பள விஷயத்தில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறோம்.. பின்னே எந்த விஷயத்தில் மம்முட்டியையும், பிருத்விராஜையும் ஓவர்டேக் செய்துவிட்டார் என்றால் படங்களை ரிலீஸ் செய்வதில் தான்.. கடந்த மூன்று மாதங்களில் 83 நாட்களில் மூன்று படங்களை (அச்சா தின், உடோபியாயிலே ராஜாவு, பத்தேமாறி) ரிலீஸ் செய்த மம்முட்டியின் சாதனையை அதன்பின் பிருத்விராஜ் முறியடித்தார். அதாவது 5௦ நாட்களில் ('டபுள் பேரல்', 'என்னு நிண்டே மொய்தீன்', 'அமர் அக்பர் அந்தோணி) மூன்று படத்தை ரிலீஸ் செய்து புதிய ரெக்கார்டு படைத்தார்.
ஆனால் இப்போது அந்த ரெக்கார்டை முறியடித்து 49 நாட்களில் 3 படங்களை ரிலீஸ் செய்யும் சாதனைக்கு சொந்தக்காரராக மாற இருக்கிறார் குஞ்சாக்கோ போபன். கடந்த அக்-16ல் 'லார்டு லிவிங்ஸ்டோன் 7௦௦௦ கண்டி', நவ-2௦ல் 'ராஜம்மா அட் யாகூ' என இரண்டு படங்களை ரிலீஸ் செய்தவர், டிச-4ல் தன்னுடைய 'வலிய சிறகுள்ள பட்சிகள்' என்கிற படத்தை ரிலீஸ் செய்கிறார். படத்தின் கதை கேரளாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 'எண்டோசல்பான் குற்றவாளி'களை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாம். படத்தை இயக்கியுள்ள டாக்டர் பைஜூ தேசிய விருதுபெற்ற இயக்குனர் என்பதால் படம் அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.