ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'காக்கா முட்டை' படம் வந்த பிறகு தமிழ்த் திரையுலகில் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு முன் அவர் நடித்த படங்களில் அவருக்குக் கிடைத்த பெயரை விட 'காக்கா முட்டை' படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததோடு, பல புதிய பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.
நல்ல நடனத் திறமையும், சரளமாகத் தமிழ் பேசும் திறமையும் ஐஸ்வர்யாவுக்கு பிளஸ் பாயின்டாக அமைந்துள்ளது. எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாகவும் பழகுகிறார் என்ற பேச்சும் கோலிவுட்டில் உண்டு. அவர் நடித்து அடுத்து 'ஹலோ நான் பேய் பேசுறேன்' படம் வெளியாக உள்ளது. பெயரும், புகழும் சேர ஐஸ்வர்யாவும் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று சொல்லப்பட்டது.
அது பற்றி அவரிடம் கேட்ட போது, “நடிகைகளுக்கும் வளர வளர சம்பளத்தை உயர்த்தித் தருவதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு நடிகை மூன்று கோடி சம்பளம் வாங்குவதாகச் சொல்லப்பட்டாலும் அதை நான் வரவேற்கிறேன். ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் கிடைக்கிறது. ஹீரோயின்களுக்கும் அதிக சம்பளம் கிடைத்தால் என்ன தவறு. நல்ல நடிப்புக்கும், திறமைக்கும் சம்பளம் அதிகமாக வாங்குவதில் தவறில்லை,” எனத் தைரியமாகப் பேசுகிறார்.
தமிழில் பேசத் தயங்கும் பல மும்பை நடிகைகள் ஐஸ்வர்யாவின் இந்த தைரியமான பேச்சுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்த வேண்டும்.