தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'காக்கா முட்டை' படம் வந்த பிறகு தமிழ்த் திரையுலகில் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு முன் அவர் நடித்த படங்களில் அவருக்குக் கிடைத்த பெயரை விட 'காக்கா முட்டை' படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததோடு, பல புதிய பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.
நல்ல நடனத் திறமையும், சரளமாகத் தமிழ் பேசும் திறமையும் ஐஸ்வர்யாவுக்கு பிளஸ் பாயின்டாக அமைந்துள்ளது. எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாகவும் பழகுகிறார் என்ற பேச்சும் கோலிவுட்டில் உண்டு. அவர் நடித்து அடுத்து 'ஹலோ நான் பேய் பேசுறேன்' படம் வெளியாக உள்ளது. பெயரும், புகழும் சேர ஐஸ்வர்யாவும் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று சொல்லப்பட்டது.
அது பற்றி அவரிடம் கேட்ட போது, “நடிகைகளுக்கும் வளர வளர சம்பளத்தை உயர்த்தித் தருவதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு நடிகை மூன்று கோடி சம்பளம் வாங்குவதாகச் சொல்லப்பட்டாலும் அதை நான் வரவேற்கிறேன். ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் கிடைக்கிறது. ஹீரோயின்களுக்கும் அதிக சம்பளம் கிடைத்தால் என்ன தவறு. நல்ல நடிப்புக்கும், திறமைக்கும் சம்பளம் அதிகமாக வாங்குவதில் தவறில்லை,” எனத் தைரியமாகப் பேசுகிறார்.
தமிழில் பேசத் தயங்கும் பல மும்பை நடிகைகள் ஐஸ்வர்யாவின் இந்த தைரியமான பேச்சுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்த வேண்டும்.