மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'காக்கா முட்டை' படம் வந்த பிறகு தமிழ்த் திரையுலகில் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு முன் அவர் நடித்த படங்களில் அவருக்குக் கிடைத்த பெயரை விட 'காக்கா முட்டை' படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததோடு, பல புதிய பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.
நல்ல நடனத் திறமையும், சரளமாகத் தமிழ் பேசும் திறமையும் ஐஸ்வர்யாவுக்கு பிளஸ் பாயின்டாக அமைந்துள்ளது. எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாகவும் பழகுகிறார் என்ற பேச்சும் கோலிவுட்டில் உண்டு. அவர் நடித்து அடுத்து 'ஹலோ நான் பேய் பேசுறேன்' படம் வெளியாக உள்ளது. பெயரும், புகழும் சேர ஐஸ்வர்யாவும் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று சொல்லப்பட்டது.
அது பற்றி அவரிடம் கேட்ட போது, “நடிகைகளுக்கும் வளர வளர சம்பளத்தை உயர்த்தித் தருவதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு நடிகை மூன்று கோடி சம்பளம் வாங்குவதாகச் சொல்லப்பட்டாலும் அதை நான் வரவேற்கிறேன். ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் கிடைக்கிறது. ஹீரோயின்களுக்கும் அதிக சம்பளம் கிடைத்தால் என்ன தவறு. நல்ல நடிப்புக்கும், திறமைக்கும் சம்பளம் அதிகமாக வாங்குவதில் தவறில்லை,” எனத் தைரியமாகப் பேசுகிறார்.
தமிழில் பேசத் தயங்கும் பல மும்பை நடிகைகள் ஐஸ்வர்யாவின் இந்த தைரியமான பேச்சுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்த வேண்டும்.