மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
ராம்கோபால் வர்மா டுவிட்டரில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டாலே ரணகளமாகும், அமிதாப் ஒரு முட்டாள் என்று போடுவர். ஷங்கரெல்லாம் ஒரு டைரக்டரா என்பார், பாகுபலியில என்ன இருக்குன்னு கேட்பார் இப்படி தனது அதிரடி கமெண்டுகளால் தன்னை விளம்பர வெளிச்சத்திலேயே வைத்திருக்கிறவர் ராம்கோபல் வர்மா. இன்றைக்கு வரும் தாதா படங்களின் தாத்தா இவர். மும்பை நிழல் உலக தாதாக்களை பற்றி இவர் இயக்கிய சத்யா, கம்பெனி, சர்க்கார் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ரங்கீலா என காதல் படமும் எடுத்தார் பூம் என திகில் படமும் எடுத்தார் எல்லாமே ஹிட்தான். ஆனால் ரத்த சரித்திரம் முதல் கடந்த 5 வருடமாக வர்மாவின் எந்த படமும் வெற்றி பெறவில்லை. என்றாலும் தனது அதிரடி கருத்துக்களால் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவர், தன் சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு சிடி கடையில் பணியாளராக சேர்ந்தது முதல் சினிமாவில் நுழைந்தது வரை தான் சந்தித்த பிரச்னைகள், நிழல் உலக தாதாக்களுடன் தனக்கிருந்த நெருக்கம்... என பல விஷயங்களை அதில் எழுதுகிறார்.
"நான் அமிதாப் பச்சனை முட்டாள் என்றபோது", "என் வாழ்க்கையில் பெண்கள்", "நிழல் உலகத்துடன் எனது தொடர்பு" இவைகள் அவரது சுயசரிதையின் அத்தியாயங்கள் என்று அவரே டுவிட்டரில் எழுதியிருக்கிறார். தெலுங்கு, இந்தி, தமிழ் மொழிகளில் ரூபா பதிப்பகம் வெளியிடுகிறது.