டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல தயாரிப்பாளர், வசனகர்த்தா மல்லியம் ராஜகோபால். இவரது மகன் ராஜ்பரத் சினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க போராடிக் கொண்டிருக்கிறார். சசி இயக்கிய 555, மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வில்லனாக அறிமுகமான ராஜ்பரத் தற்போது நட்பதிகாரம், ஆந்திரா மெஸ், சிகை போன்ற படங்களில் நடித்து வருகிறார். நட்பதிகாரத்தில் இரு ஹீரோக்களில் ஒருவர் என்ற நிலையை அடைந்திருக்கும் அவர் நிச்சயம் ஹீரோவாக ஜெயித்து அப்பா பெயரை காப்பாற்றுவேன் என்கிறார். மேலும் அவர் கூறியதாவது:
என்னுடைய அப்பா சினிமாவில் இருந்தாலும் நான் பி.இ. படிச்சு முடிச்சேன். ஐடி கம்பெனியில் வேலை கிடைச்சு போய்கிட்டிருந்தேன். ஒருநாள் எனக்குள் ஏற்பட்ட திடீர் முடிவுதான் நான் சினிமாவுக்கு வந்தது. என் அப்பா தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திட்டுப்போன அந்த இடத்தை நாம் சுலபமா மறந்திட்டதா தோணிச்சு வேலையை விட்டுட்டு பெரிய இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு போனேன். மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடிக்க முடிந்தது.
நட்பதிகாரம் படம் காதல், நட்பு, குடும்பம் இந்த மூன்றும் கலந்த கதையாக இருக்கும் இதில் கத்தி மேல் நடப்பது போன்ற கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன். அதே போல சிகை படத்தில் என்னொடு கதிர் நடிக்கிறார். என்னை பொறுத்தவரை கேரக்டர் மட்டும்தான் முக்கியம் அது வில்லனாக இருந்தாலும் சரி ஹீரோவாக இருந்தாலும் சரி படத்தில் முக்கிய பங்காக ஒரு சில இடங்களில் வந்தாலும் சரி ரசிகர்கள் மனதில் பதியணும் அவ்வளவுதான். அப்பா பெயரை காப்பாற்றும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது.” என்றார் ராஜ் பரத்.