மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இசை படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா அடுத்து என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். வை ராஜா வை படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார், யட்சன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவாகவே வந்தார், இறைவி படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து விஜய்க்கு கதை சொல்லிவிட்டு காத்திருக்கிறார். இப்படி பல நிலைப்பாடுகளில் இருந்த எஸ்.ஜே.சூர்யா இப்போது ஒரு நிலையான முடிவுக்கு வந்திருக்கிறார்.
செல்வராகவனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மணிகண்டன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் டைட்டில் 174. ஒரு சந்தேக மரண வழக்கிற்கு போலீஸ் செக்ஷன் நம்பர்தான் 174. அதையே பின்னணியாக கொண்டு. அதாவது ஒரு மரணம் நடக்கிறது. அதை கொலை என்கிறது மரணம் தொடர்பான மனிதரின் உறவுகள். தற்கொலை என வழக்கை முடிக்க நினைக்கிறது போலீஸ். இதில் உண்மை என்பதை கண்டுபிடிக்கிற திரைக்கதை. காமெடி கலந்த த்ரில்லர் கதை. ஏற்கெனவே போலீஸ் செக்ஷன் 144ஐ தலைப்பாக கொண்டு ஒரு படம் தயாராகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு ஹீரோயின் உள்ளிட்ட மற்ற கலைஞர்களின் தேர்வுகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கிறது.