ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு திருப்புமுனை கேரக்டரில் ஒருசில காட்சிகள் நடிப்பார். அவருக்குள் நடிப்பு ஆசை எப்போதுமே உண்டு. அதனால் டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கி, அதில் தானே ஹீரோவாக நடித்தார். அது தன் கனவு படம் என்றும், கடைசி படம் என்றும் சொன்னார். ஆனால் அந்தப் படம் தோல்வி அடைந்தது. தற்போது ஒரு படத்தில் தனுஷின் அப்பாவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் நையப்புடை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக பாடலாசிரியர் பா.விஜய் நடிக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஜோடி கிடையாது. அவர் அக்கிரமங்களை கண்டு பொங்கி எழும் 70 வயது முதியவராக நடிக்கிறார். அதாவது இந்தியன் தாத்தா மாதிரி. பா.விஜய் இளம் நிருபராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இவர்கள் தவிர எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், விஜி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
தாஜ்நூர் இசை அமைக்கிறார், ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் விஜய்விக்ரம் இயக்குகிறார். இவர் புனே திரைப்படக்கல்லூரியில் இயக்குனருக்கு படித்து விட்டு சில இந்திப் படங்களில் பணியாற்றிவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறார். "இது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படம். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரையும் அவரது மகன் விஜய்யையும் வைத்து ஒரே நேரத்தில் படம் தயாரிக்கும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் சார் நல்ல நடிகராக ஒரு ரவுண்டு வருவார்" என்கிறார் கலைப்புலி எஸ்.தாணு.