ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த பாலிவுட் நடிகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் தயாராக இருந்தது. இப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க இருந்ததாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகளும் வந்தன. ஆனால் இப்போது அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக நடிகர் ரன்பீர் கபூர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரன்பீர் கூறியுள்ளதாவது... கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க நானும், அனுராக் பாசுவும் எண்ணியிருந்தோம். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. நிறைய பிரச்னைகள் இருப்பதால் இப்படத்தை உருவாக்க முடியவில்லை. குறிப்பாக படத்திற்கான சரியான நடிகர்களும் கிடைக்கவில்லை, கிஷோரின் குடும்பத்தாருக்கு இதில் உடன்பாடில்லை. ஆகையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது என்று கூறியுள்ளார்.