அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தான் ஒரு யதார்த்தமான நடிகையாக சினிமாவில் நிலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதனால் எந்த டைரக்டரிடம் கதை கேட்டாலும் எனக்கு பந்தா பகட்டான வேடமெல்லாம் வேண்டாம். எளிமையான, யதார்த்தமான பெண்ணாக நடிக்கக்கூடிய வேடமாக கொடுங்கள். அதில்தான் நிறைய பர்பாமென்ஸ் பண்ண முடியும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், இது என்ன மாயம் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ரஜினி முருகன் படத்தில் மதுரை பெண்ணாக அந்த ஏரியா பெண்களைப்போன்றே நடை உடை பாவணைகளை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். இதற்காக அந்த ஏரியாவுக்கு படப்பிடிப்புக்காக சென்றபோது அங்கு படப்பிடிப்பை காணவந்த இளம் பெண்களின் நடவடிக்கைகளை கவனித்து அதை தனது நடிப்பில் பிரதிபலித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.
அதைத் தொடர்ந்து அவர் பாபி சிம்ஹாவுடன் நடித்துள்ள பாம்பு சட்டை படத்தில் துணி தைக்கும் எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் ஏழை பெண்ணாக கநடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த கதாபாத்திரத்திற்காக தனது உடம்பில் ஏழ்மையை காட்ட பழைய துணிகளாக அணிந்து நடித்த அவர், நடிப்பிலும் எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் பெண்களைப்போன்றே இயல்பாக நடித்துள்ளாராம். அதனால் ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த இரண்டு படங்களும் தன்னை தமிழ் சினிமாவில் பேச வைக்கும் படங்களாக அமையும் என்று தான் எதிர்பார்ப்பதாக சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.