இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஓ காதல் கண்மணி படத்தின் ஹிட்டுக்குப்பிறகு ஒரு மெகா பட்ஜெட் படத்தை இயக்க திட்டமிட்டார் மணிரத்னம். அந்த படத்திற்காக தெலுங்கு நடிகர்களான நாகார்ஜூனா, மகேஷ்பாபு மற்றும் கார்த்தி என ஒரு பெரிய கூட்டணியை அமைத்தார். ஆனால், கதையெல்லாம் ஓகேயான பிறகு சம்பள பேச்சுவார்த்தை நடந்தபோது தெலுங்கு நடிகர்கள் பேக் அடித்து விட்டனர். இதனால் பின்னர் அவர்களுக்கு பதிலாக அதே படத்தில் மீண்டும் துல்கர்சல்மானை இணைத்து அடுத்தகட்ட முயற்சிகளை தொடங்கினார் மணிரத்னம்.
ஆனால் பின்னர், துல்கர்சல்மானை நீக்கிவிட்டு கார்த்தி, நானி என்று புதிய கூட்டணியை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நித்யாமேனன், கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்த நிலையில், இப்போது நித்யாமேனன் மற்றும் இன்னொரு நாயகியாக தற்போது ரஜினியின் கபாலி படத்தில் அவரது மகளாக நடித்து வரும் தன்ஷிகா கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் தன்ஷிகா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிற விவரம் தெரியவில்லை.
மேலும், மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்து வந்தது. ஆனால் இப்போது நான் ரஜினி படத்தில் நடிப்பதினால்தான் அது சாத்தியமாகியிருக்கிறது என்று சொல்லி கபாலி யூனிட் நண்பர்களிடம் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார் தன்ஷிகா.