நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
தமிழ்த் திரையுலகத்தில் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் மனதை விட்டு அகலாத சில திரைப்படங்கள் உள்ளன. உதாரணத்திற்கு எம்ஜிஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், ரஜினிகாந்திற்கு பாட்ஷா என்பதைப் போல கமல்ஹாசனுக்கு மூன்றாம் பிறை.
பாலுமகேந்திராவின் இயக்கம், ஒளிப்பதிவில் இளையராஜாவின் இனிமையான இசையமைப்பில் கமல்ஹாசன், ஸ்ரீதேவியின் அற்புதமான நடிப்பில் வெளிவந்த படம். ஏன் அந்த சுப்பிரமணி நாய்குட்டி போல இன்னொரு நாய் குட்டி கூட கிடைக்குமா என வியக்கும் அளவில் அமைந்த படம் அது. 1982ல் வெளிவந்த அந்தப் படம் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பாலுமகேந்திராவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. பல விருதுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல் கமர்ஷியல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம்.
ஹிந்தியில் பாலுமகேந்திரா, இளையராஜா, கமல்ஹாசன், ஸ்ரீதேவி கூட்டணியில் ரீமேக் ஆகி 1983ம் ஆண்டு வெளியானது. அதன்பின்தான் ஸ்ரீதேவி ஹிந்தியில் மிகப் பெரிய நடிகையாக உயர்ந்தார். இப்போது அந்தப் படத்தை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் மீண்டும் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல விளம்பரப் படைப்பாளியான லாயிட் பாப்டிஸ்டா வாங்கியுள்ளார். அவர் ஹிந்தியில் இப்படத்தை ரீமேக் செய்யும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். தமிழிலும் மீண்டும் ரீமேக் செய்யும் எண்ணத்தில் அவர் இருக்கிறாராம்.
கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற தீவிர சினிமா ரசிகர்களும் மூன்றாம் பிறை படத்தை மீண்டும் வேறு ஒரு கூட்டணியில் ரீமேக் செய்வதை விரும்ப மாட்டார்கள். அந்தப் படம் படைப்பாக்கம், இசை, நடிப்பு என பல விஷயங்களில் உணர்வு பூர்வமாக படைக்கப்பட்ட ஒரு படம். அப்படிப்பட்ட மூன்றாம் பிறை படத்தை மீண்டும் ரீமேக் செய்து பௌர்ணமி ஆக்குகிறேன் என்று அமாவாசை ஆக்கி விடாதீர்கள் என்பதுதான் பலரின் எண்ணமாக உள்ளது.