அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
கடந்த மாதம் மலையாளத்தில் வெளியாகி இப்போதும் கூட வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் அமர் அக்பர் அந்தோணி'. பிருத்விராஜ், இந்திரஜித் மற்றும் ஜெயசூர்யா மூவரும் கதாநாயகர்களாக நடித்த இந்தப்படத்தை நடிகரான நாதிர்ஷா இயக்கியிருந்தார். இந்தப்படத்திற்கு கதை எழுதியவர்கள் இரட்டை எழுத்தாளர்களான பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னிகிருஷ்ணன். சொல்லப்போனால் இந்த மூவருமே மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக இருந்து இயக்குனராகவும், கதாசிரியர்களாகவும் மாறியவர்கள் என்பதால் இந்த மூவருக்குமே நல்ல நட்பும் புரிதலும் உண்டு.
இந்தப்படத்தின் கதையை இந்த இருவரும் எழுதும்போதே ஒரு ஹீரோவாக பிருத்விராஜையும் மற்ற இரண்டு ஹீரோக்கள் கதாபாத்திரத்திற்கு தங்களையும் கற்பனை பண்ணிக்கொண்டுதான் எழுதினார்களாம். அதிலும் இடதுகால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான பிபின் ஜார்ஜ், படத்தில் இடம் பெற்ற அந்தோணி கேரக்டரையும் அதேபோல மாற்றுத்திறனாளியாகவே எழுதிவிட்டார். ஆனால் கதையை படமாக்க முயற்சி செய்யும்போது, நாதிர்ஷா இவர்கள் இருவரையும் தூக்கிவிட்டு இந்திரஜித்தையும் ஜெயசூர்யாவையும் புக் பண்ணிவிட்டாராம். அதிலும் ஜெயசூர்யா, அந்த அந்தோணி கேரக்டர் தனக்குத்தான் வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டாராம்.