பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மொழி, அபியும் நானும், பயணம், கெளரவம் உள்பட சில படங்களை இயக்கியவர் ராதாமோகன். நடிகர் பிரகாஷ்ராஜின் டூயட் மூவீசுக்கு தொடர்ந்து படம் இயக்கி வந்த இவர், தற்போது அங்கிருந்து இடம்பெயர்ந்து உப்புக்கருவாடு என்ற படத்தை பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்துக்காக இயக்கியிருக்கிறார். கருணாகரன், நந்திதா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற 27-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் உப்புக்கருவாடு படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது அப்படத்தில் நடித்திருந்த பலரும் ராதாமோகனின் முந்தைய வெற்றி படங்களை உப்புக்கருவாடுடன் ஒப்பிட்டு அந்த படங்கள் அளவுக்கு இந்த படமும் வெற்றி பெறும் என்று சொல்லி தங்களுக்கு வாய்ப்பு கொடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
ஆனால், பட நாயகி நந்திதா மட்டும், தான் பேசும்போது என்னை இந்த படத்தில் நாயகியாக நடிக்க செலக்ட் பண்ணியது ஏன்? இதற்கு டைரக்டர் பேசும்போது பதில் சொல்ல வேண்டும் என்று பேசி விட்டு அமர்ந்தார். அதையடுத்து பேசவந்த ராதாமோகன், நந்திதா பேசியபோது என்னை ஏன் இந்த படத்திற்கு செலக்ட் பண்ணினீர்கள்? என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு ஒரு சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. நான் இந்து, என் மனைவி கிறிஸ்டியன். காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் திருமணம் செய்து கொள்ள சர்ச்க்கு சென்றபோது, அங்குள்ள பாதிரியார் என்னிடம், இந்த பெண்ணை எதனால் உங்களுக்கு பிடித்தது என்று கேட்டார். நான் தெரியல பாதர் என்றேன்.
அதேமாதிரிதான் இந்த கதைக்கு நந்திதாவை நடிக்க வைத்ததற்கு எந்த காரணமும் இல்லை. நான் கதையை எழுதியபோது அவராகவே என் மனசுக்குள் வந்து ஒட்டிக்கொண்டார். எப்போதுமே நான் கதையை எழுதி விட்டுத்தான் நடிப்பவர்களை முடிவு செய்வேன். ஆனால் இந்த படத்தில் நந்திதாவை மட்டும் கதையை எழுதிக்கொண்டிருந்தபோதே முடிவு செய்து விட்டேன். அது ஏன்? எதற்காக என்று சொல்லத் தெரியவில்லை. இந்த கதை தான் அவரை முடிவு செய்தது என்றார்.