'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திருக்குமரன் எண்டர்டெயன்மெண்ட் சார்பில் சி.வி குமாரும், அபி அண்ட் அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவனும் இணைந்து தயாரித்துள்ள படம் '144'. மிர்சி சிவா, அசோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர். இவர்களுடன் உதயபானு மகேஸ்வரன், மதுசூதனன், ராம்தாஸ், சுஜாதா, ரத்தினசாமி, ஹலோ கந்தசாமி ஆகிய காமெடி டீம் களம் இறங்கி உள்ளது. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். ஜி.மணிகண்டன் இயக்கி உள்ளார்.
இது பங்காளி பகையாளி கதை என்கிறார் இயக்குனர் மணிகண்டன் அவர் மேலும் கூறியதாவது: எங்கேயாவது கலவரம் நடந்தால் போலீஸ் 144 சட்டம் போடும் அதாவது நான்குபேர் சேர்ந்து நிற்ககூடாது, இறுதி ஊர்வலம், திருமண ஊர்வலம் தவிர வேறு ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என்பது அந்த சட்டம். இந்த சட்டத்தை அடிக்கடி சந்தித்த இரண்டு ஊர் பங்காளி பகையாளிகள் கதை.
எந்த வம்புதும்புக்கும் போகாத ஊர் ஒன்று. வம்பு சண்டை போடாவிட்டால் தூக்கம் வராத ஒரு ஊர். இந்த இரண்டு ஊருக்கும் சதாசர்வ காலமும் சண்டைதான். பீடி பற்ற வைக்க தீப்பெட்டி கொடுக்கலைன்னாக கலவரத்தை உண்டு பண்ணிடுவாங்க. தீப்பெட்டிக்கே இப்படின்னா இரண்டு காதல் தீ பிடிச்சுதுன்னா எப்படி இருக்கும். அந்த ரணகளத்தை ஜாலியாக சொல்லி, சிரிக்க வைத்து, சின்னதா ஒரு மெசேஜும் சொல்கிற படம் என்கிறார் மணிகண்டன்.