இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் ''க க க போ''. இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு அடிக்கடி பேசும் காமெடி வசனத்தையே தலைப்பாக கொண்ட படம். இதில் ஹீரோவானவர் இளம் நடிகர் கேசவன். அவருக்கு ஜோடியாக சாக்ஷி அகர்வால் நடித்திருக்கிறார். கேசவன் மலேசியாவை சேர்ந்தவர். நடிப்பு ஆசையில் சென்னை வந்து வாய்ப்புகள் தேடி இறுதியாக 'க க க போ' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் படத்தில் நடித்து முடித்துவிட்டு மலேசியாவுக்கு சென்று விட்டார். அங்கு தன் குடும்பத்தினருடன் ஐ போ டிடோர் என்ற வனஉயிரில் பூங்காவுக்கு சுற்றுலாச் சென்றார். அப்போது அங்குள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் கேசவன் குளித்துள்ளார். அப்போது திடீரென்று வழுக்கி விழுந்த கேசவன், பெற்றோர், உறவினர் கண் முன்னாலேயே நீரில் அடித்துச் செல்லப்பட்டார். கதறி உதவிக்கு அழைத்தனர் பெற்றோர்கள். அதற்குள் நீண்ட தூரம் அடித்துக் செல்லப்பட்ட கேசவன் பாறைகளில் மோதி பலியானார். அவரது உடல் உடனடியாக மீட்க்கப்பட்டது. மலேசியாவிலேயே இறுதி சடங்குகளும் நடந்தது.
கேசவனின் திடீர் மரணத்தால் க க க போ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளர். அடுத்த வாரம் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. இந்த விழாவுக்கு குடும்பத்துடன் வர திட்டமிட்டிருந்தார் கேசவன். அதற்குள் இப்படி ஒரு பரிதாப முடிவ அவருக்கு ஏற்பட்டு விட்டது.