வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
தமிழ்த் திரையுலகில் பிரிவதும் இணைவதும் வழக்கமா நடக்கும் ஒன்றுதான். நடக்கவே நடக்காத விஷயங்களாக கருதப்பட்ட விஷயங்கள் காலப் போக்கில் நடந்துள்ளன. அதற்குப் பெரிய உதாரணமாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், அஜித் இருவரையும் சொல்லலாம். ஒரு காலத்தில் அவர் தயாரிப்பில் நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்திருந்த அஜித் தற்போது அவருடைய தயாரிப்பில் மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். 'துருவ நட்சத்திரம்' படப்பிரச்சனையில் பிரிந்த கௌதம் மேனன் - சூர்யா கூட சீக்கிரம் இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ்த் திரையுலகில் ரமணனின் வானிலை அறிக்கை போல எதுவும் நடக்கலாம்.
அப்படி ஒரு வானிலை மாற்றம் தற்போது விக்ரம், நயன்தாரா ஆகியோரிடையே ஏற்பட்டுள்ளது. 'கள்வனின் காதலி' படத்தில் நயன்தாரா நடித்த போது, விக்ரமுடன் நயன்தாராவை ஜோடியாக நடிக்கக் கேட்டதாகவும், ஆனால், 'கள்வனின் காதலி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நயன்தாரா நடிக்கக் கூடாது என விக்ரம் கண்டிஷன் போட்டதாகவும் கோலிவுட்டில் நீண்ட காலமாக செய்தி உலவி வருகிறது. நயன்தாரா நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1999ல் வெளிவந்த 'சேது' படத்தின் திருப்பு முனை மூலம் விக்ரமும் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இந்த 10 ஆண்டுகளில் இருவருமே ஜோடி சேர்ந்து நடிக்காமலே இருந்தார்கள். விஜய் சேதுபதியுடனும் ஜோடி சேர்ந்த நயன்தாரா விக்ரமுடன் ஜோடி சேரவில்லை என்றால் எப்படி ?.
'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரின் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் அடுத்த படத்திற்கு நயன்தாராவை ஜோடியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். நயன்தாராவின் மனதைக் கனிய வைத்த அந்த புண்ணியவான் யார் என்று கோலிவுட்டில் கடந்த சில நாட்களாகப் பரபரப்பாகப் பேச்சு எழுந்து வருகிறது. அந்த 'வி' யாக இருப்பாரோ?