விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
புதிதாகப் பதவியேற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராட்டங்கள் போன்றவற்றை நடத்தாது என்றும் காவிரிப் பிரச்சனை, இலங்கைத் தமிழர் பிரச்சனை போன்றவற்றை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். இம்மாதிரியான பிரச்சனைகளில் நடிகர் சங்கம் தலையிடாது என்றும் விஷால் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அது குறித்து அப்போதே பலர் விமர்சனம் செய்திருந்தனர். நடிகர் சங்கம் இம்மாதிரியான பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், மக்களின் பிரச்சனைகளைத் தங்கள் பிரச்சனைகளாகவும் பார்க்க வேண்டும் என்றும் பலமாக கருத்துக்கள் எழுந்தது.
கேரளாவில் தெருநாய்கள் கொல்லப்பட்டதற்கெல்லாம் போராட்டம் நடத்திய விஷால் தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் போராட மாட்டாரா என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். தீபாவளிக்கு முன்னதாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷால் தனிப்பட்டு யாரும் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளலாம். நடிகர் சங்கத்தை சில அரசியல் சார்ந்த விஷயங்களில் இழுத்துவிட்டு அதை சர்ச்சைக்குள்ளாக்குவதை விரும்பவில்லை என்ற காரணத்தாலேயே முன்னர் அப்படி சொன்னதாகத் தெரிவித்தார்.
சமீபத்தில் கடலூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்ட போது நடிகர்கள் உதவி செய்ய முன் வரவில்லை என்றும் அவர்கள் படங்கள் வெளியானால் கட்-அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்த ரசிகர்களுக்காக நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்ற சர்ச்சையும் சமூக வலைத்தளங்களில் பலமாக எழுந்தது.
“வெள்ள நிவாரணப் பணிகளில் நடிகர் சங்கம் ஏற்கெனவே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிகளை செய்துள்ளோம், கடலூருக்கும் நிவாரணப் பொருட்கள் சென்று சேரும், எங்களால் முடிந்த சிறு உதவிகளைச் செய்து வருகிறோம்,” என நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.