ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்துவிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் 'தோனி, உன் சமையலறையில்' படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மட்டும் உருவாகும் என்று தெரிகிறது. 'மன ஊரி ராமாயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு பிரகாஷ்ராஜின் அபிமான இசையமைப்பாளரான இளையராஜா இசையமைக்க உள்ளார். 'தோனி, உன் சமையலறையில்' படங்களுக்கும் இளையராஜாதான் இசையமத்தார்.
'மன ஊரி ராமாயணம்' படத்தை பிரகாஷ்ராஜ் தமிழில் உருவாக்குவாரா என்பது சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் 'தோனி, உன் சமையலறையில்' ஆகிய இரண்டு படங்களும் தமிழில் சரியாகப் போகவில்லை. அந்த இரண்டு படங்களுமே ரீமேக் படங்கள்தான் 'தோனி' படம் மராத்திய திரைப்படமான 'ஷிக்ஷனாச்சிய ஆய்சா கோ' என்ற படத்தின் ரீமேக். 'தோனி' படம் மூலம் 'கபாலி' படத்தின் நாயகியான ராதிகா ஆப்தேயை பிரகாஷ்ராஜ் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். 'உன் சமையலறையில்' திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்த 'சால்ட் அன்ட் பெப்பர்' படத்தின் ரீமேக்.
தற்போது பிரகாஷ்ராஜ் இயக்க உள்ள படம் நேரடிக் கதையா அல்லது மீண்டும் ஒரு ரீமேக்கா என்பது பற்றி இன்னும் எந்தத் தகவலும் வெளிவரவில்லை. அனேகமாக நேரடிக் கதையைத்தான் அவர் படமாக்குவார் என எதிர்பார்க்கலாம். கடந்த சில மாதங்களாகவே இந்தப் புதிய படத்திற்காக அவர் கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். தமிழிலும் அந்தப் படத்தை இயக்குவது குறித்து பிரகாஷ்ராஜ் விரைவில் அறிவித்துவிடுவது தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கும்.