ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் வருடத்திற்கு 25 படங்கள் வரை இசையமைத்து வரும் முன்னணி இசையமைப்பாளர் கோபி சுந்தர். இவர் தற்போது தமிழில் அஞ்சல, அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார். முன்னதாக, பொய்சொல்லப்போறோம், நந்தனம், யாருடா மகேஷ் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ள கோபி சுந்தர், இனிமேல் மலையாள படங்களுக்கு இணையாக தமிழ்ப்படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாராம். அதோடு, தற்போது விமல் நடித்துள்ள அஞ்சல படத்திற்கு தான் சிறப்பான இசையை கொடுத்திருப்பதாக சொல்லும் அவர், இந்த படத்திற்கு பிறகு தமிழில் நானும் பேசப்படும் இசையமைப்பாளராகி விடுவேன் என்கிறார்.
மேலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தபோது கலந்து கொண்ட கோபிசுந்தர், தான் மலையாளததில் அதிகப்படங்களுக்கு இசையமைத்து வருவதைப்பற்றி பேசினார். அதேசமயம், அதே மேடையில் தனக்கு முன்பு பேசிய அஞ்சல படத்தின் டைரக்டர் தங்கம் சரவணன், மேடைக்கு புதிது என்பதால் பேச முடியாமல் திக்கிதிணறியதை சுட்டிக்காட்டி, இவர் படத்திற்கு இசையமைக்கும்போது என்னை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், ரெக்கார்ட்டிங் தியேட்டரில் புலி மாதிரி நடந்து கொண்டவர், இங்கே எலியாகி விட்டார். அதோடு, இனிமேல் அவர் எந்த மேடையில் ஏறினாலும், நன்றாக பேச வேண்டும். இப்படி தட்டுத்தடுமாறி பேசினால் நானே வந்து அடிப்பேன் என்று சிரித்தபடியே அவரை எச்சரித்தார் கோபி சுந்தர்.