ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வெள்ளித்திரையில் பிரபலமான பல காமெடி நடிகர்கள் சின்னத்திரை இண்டர்வியூக்களுக்கு கூட வரமாட்டார்கள். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற காமெடியன்கள் கூட டிவி பக்கம் தலைகாட்ட விரும்புவதில்லை.. ஒரு சிலர் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்கிறார்கள். மலையாள காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் இந்த விதிவிலக்கு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.. ஆம்.. திலீப், மோகன்லால் ஆகியோரின் படங்களில் நடித்துவரும் பிசியான காமெடியனான இவர் மலையாளத்தில் ப்ளவர்ஸ் சேனலில் 'காமெடி சூப்பர் நைட்' என்கிற டாக் ஷோவை கிட்டத்தட்ட 12௦ நாளாக நடத்தி வருகிறார். திங்கள் முதல் வியாழன் வரை வாரத்தில் நான்கு நாட்கள் இந்த ஷோ ஒளிபரப்பாகிறது.
ஏன் இந்த திடீர் மாற்றம் என சுராஜிடம் கேட்டால் வித்தியாசமான பதில் வருகின்றது அவரிடமிருந்து. “இயல்பிலேயே நான் அதிகம் பேசுபவன்.. பேசிக்கொண்டே இருக்க விரும்பவன்.. சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும் நேரம் தவிர வேறு யாருடனாவது பேசிக்கொண்டு இருக்கலாம் என நினைத்தால் ஒவ்வொருத்தரும் அவர்கள் மொபைல் போனில் மூழ்கி விடுகிறார்கள். ஆனால் டிவியில் நடத்தும் இந்த டாக் ஷோ மூலம் பலருடன் பேச முடிகிறது.. ஆடியன்ஸ் எந்த மாதிரியான காமெடியை விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு அதை சினிமாவில் பயன்படுத்த முடிகிறது.. சொல்லப்போனால் இது எனக்கு ஒரு வகையில் ரிலாக்ஸ் தான்” என்கிற சுராஜ் வெஞ்சாரமூடு. நிச்சயம் வித்தியாசமான நடிகர் தான்.