ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் கமல் நடித்த படம் தூங்காவனம். இப்படத்தின் தமிழ் பதிப்பு தீபாவளி தினத்தன்று ரிலீசாகி விட்டது. இந்நிலையில், தெலுங்கு பதிப்பு சீகட்டி ராஜ்யம் என்ற பெயரில் நேற்று வெளியாகியுள்ளது. முன்னதாக, ஐதராபாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியுள்ளார் கமல். அப்போது அவர் பேசும்போது, சினிமாவில் நான் ஒரு இயக்குனராகத்தான் வந்தேன். ஆனால் கே.பாலசந்தர்தான் உனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்று சொல்லி என்னை நடிகனாக்கினார். அவர் காட்டிய பாதையில் இன்றுவரை போய்க்கொண்டிருக்கிறேன். நான் தமிழனாக இருந்தாலும் என்னை ரசிகர்கள் ஒரு நடிகனாகத்தான் பார்க்கிறார்கள். தென்னிந்தியா மட்டுமின்றி இந்தி சினிமா வரை அப்படித்தான் உள்ளது.
மேலும் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் பாரதியார் கவிதை இடம்பெற்றிருந்தது. அப்படம் தெலுங்கில் ஆகலி ராஜ்யம் என்ற பெயரில் வெளியானது. அப்போது தெலுங்கு கவிஞர் ஸ்ரீஸ்ரீயின் கவிதை அந்த படத்தில் இடம்பெற்றது. அதைப் பேசிபேசி நான் தெலுங்கு கற்றுக்கொண்டேன். அதோடு, என்னை உலக நாயகன் என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். ஆனால் அந்த பட்டத்தை நினைத்து நான் ஒருபோதும் கர்வம் கொண்டதில்லை. காரணம், தாய் தன் குழந்தையை மகாராஜா என்று கொஞ்சுவார். அதை வைத்து நான் மகாராஜா என்று அந்த குழந்தை கர்வம் கொள்ளக்கூடாது. அப்படித்தான் உலகநாயகன் விசயத்திலும் நான் இருந்து வருகிறேன்.
அதோடு, இந்த சினிமாவில் சிவாஜிகணேசன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், ரங்காராவ் என எத்தனையோ சிறந்த பெரிய நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கையில் நான் ஒரு சிறிய நடிகன்தான்.
இவ்வாறு கமல் பேசியுள்ளார்.