'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'தாரை தப்பட்டை' படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக முடித்து வரும் இயக்குனர் பாலா தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்திவிட்டார். பாலாவின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களான ஆர்யா, விஷால், அதர்வா ஆகியோருடன் சமீபத்திய 'தனி ஒருவன்' புகழ் அரவிந்த் சாமி, 'பாகுபலி' புகழ் ராணா டகுபட்டி ஆகியோரும் நடிக்க உள்ளார்கள். ஒரு பிரம்மாண்டமான வித்தியாசமான நட்சத்திரக் கூட்டணியாக அமைந்துள்ள இந்தப் படத்தில் எத்தனை நாயகிகள் என்பது பற்றி இன்னும் அறிவிக்கவில்லை.
படத்தில் ஒரு நாயகியா அல்லது ஐந்து நாயகிகளா அல்லது எத்தனை நாயகிகள் என்பது பற்றி சஸ்பென்சாகவே உள்ளது. இதனிடையே இயக்குனர் பாலா, இந்தப் படத்தில் ஒரு நாயகியாக அனுஷ்காவை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் என்று தெரிகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகளும் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள். ஆனால், அனுஷ்கா அடுத்து 'பாகுபலி 2' படத்தில் நடிக்கவிருப்பதால் அவரால் இந்தப் படத்திற்கு தேதிகளை ஒதுக்க முடியுமா என்பது மட்டும் கேள்வியாக உள்ளதாம். இந்தப் படத்தில் திறமையான நடிகைகளை மட்டுமே நாயகிகளாக ஒப்பந்தம் செய்ய பாலா முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள். அதில் அவருடைய முதல் தேர்வு அனுஷ்காவாக இருக்கிறதாம். மற்ற நாயகிகளாக நடிக்க முன்னணி நட்சத்திரங்கள் முன் வருவார்களா அல்லது பாலா படமா...என யோசிப்பார்களா என்பது இனிதான் தெரிய வரும்.