ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் அடுத்து நடிக்கப் போகும் படத்தை பரதன் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விஜய் இரு வேடங்களில் நடிக்க ஸ்ரேயா கதாநாயகியாக நடித்து 2007ம் ஆண்டு வெளிவந்த 'அழகிய தமிழ்மகன்' படத்தை இயக்கியவர் பரதன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இனிமையான பாடல்களுடன் வந்த அந்தப் படம் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. பரதன் அதற்கு முன் பல வெற்றிப் படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றியவர். குறிப்பாக தரணி இயக்கிய 'தில், தூள், கில்லி, ஒஸ்தி' ஆகிய படங்களுக்கு அவர் எழுதிய வசனங்கள் அப்போது மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
'அழகிய தமிழ் மகன்' படத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு வெளிவந்த 'அதிதி' என்ற படத்தை பரதன் இயக்கியிருந்தார். நிகேஷ்ராம், நந்தா, அனன்யா நடித்த அந்தப் படமும் வெற்றியைப் பெறவில்லை. என்றாலும் நடிகர் விஜய், பரதனுக்கு தன்னுடைய அடுத்த பட வாய்ப்பை இயக்கக் கொடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் திறமைசாலிகளாக இருந்தும் சரியான நேரமும், சூழ்நிலையும் அமையாமல் தோல்வியடைந்தவர்களை திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், பரதன் மீதுள்ள நம்பிக்கையால், அவர் சொன்ன கதை மீதுள்ள நம்பிக்கையால் தனக்குத் திரையுலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த 'கில்லி' படத்தின் வெற்றிக்கு வசனங்கள் மூலம் உதவி செய்தவருக்கு மீண்டும் கை கொடுத்து தூக்கி விடுவது கோலிவுட்டில் உள்ள பல திறமைசாலிகளுக்கு நம்பிக்கை விதையை விதைத்துள்ளது.