இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாகுபலி படத்தின் மூலம் உலகின் கவனத்தை திசை திருப்பியிருக்கிறார். கொரியன் திரையுலகம் முதல் ஹாலிவுட் வரை யார் இவர் என திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறது. பாகுபலி ஹாலிவுட்டுக்கு நிகராக 500 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது. தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்துக்கான பணியில் மும்முரமாக இருக்கிறார். அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் மூன்றாம் பாகத்துக்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ராஜமவுலியின் அடுத்த படம் பற்றி பரபரப்பான செய்திகள் டோலிவுட் மீடியாக்களில் பரபரக்கிறது. அவரின் அடுத்த படத்தின் பெயர் கருடா. மகாபாரதத்தின் ஒரு பகுதியை திரைக்கதையாக்கி ஹாலிவுட் பிரமாண்டங்களுக்கு நிகராக எடுக்க இருக்கிறராம். இதன் பட்ஜெட் 1000 கோடியாம். இம்மாம் பெரிய பட்ஜெட்டுக்கு எந்த தயாரிப்பாளர் கிடைப்பார் என்றால் அதற்கும் லாஜிக்கான ஒரு தகவலை சொல்கிறார்கள்.
பாகுபலி 2 பணிகள் முடிந்த பிறகு கருடா படத்தின் டிரைலரை மட்டும் 25 கோடி செலவில் எடுத்து உலகம் முழுவதும் வெளியிடப்போகிறார்களாம். அதை பார்த்த பிறகு உலகில் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் நான் முந்தி நீ முந்தி என்று ஓடோடி வருமாம். இந்திய சினிமாவின் உலக பிரமாண்ட படம் கருடா 3 வருடங்களில் தயாராகுமாம். 2020ம் ஆண்டில் உலக சினிமா சரித்திரத்தில் கருடா நம்பர் ஒன்னாக இருக்குமாம். நடக்குதோ நடக்கவில்லையோ கேக்குறதுக்கே சந்தோஷமாக இருக்கிறது.