ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோலிவுட்டைப் பொறுத்தவரை, கவர்ச்சி கதாநாயகிகள் நடிக்கும் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே அவர்களின் படக்கூலியை பன்மடங்கு உயர்த்தி விடுவார்கள். அந்த வகையில், முதல் படத்தில் 3 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகைகூட மூன்றாவது படத்திலேயே 30 லட்சம் வாங்குவார்கள். அடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியானதும் 50, 60 லட்சமாக உயர்த்தி விடுவார்கள். அதேசமயம், வில்லேஜ் கதைகளில் நடிக்கும் நடிகைகளுக்கு அப்படி யாரும் சம்பளம் கொடுப்பதில்லை. அவர்கள் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றாலும்கூட 5 லட்சம் கொடுக்கவே யோசிப்பார்கள்.
இந்த நிலைதான், இதுவரை லட்சுமிமேனன் விசயத்திலும் இருந்து வந்தது. அவர் நடித்த கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன் என பல படங்கள் ஹிட்டானபோதும், வில்லேஜ் நடிகை என்கிற ஒரே காரணத்திற்காக அவருக்கு குறைவான சம்பளமே கொடுத்து வந்தனர். ஆனால், இந்த நிலை வேதாளம் படத்திற்கு பிறகு அடியோடு மாறி விட்டது. காரணம், அந்த படத்திற்கு 20 லட்சம் சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்ட நிலையில், விசயம் அஜீத்தின் காதுக்கு சென்றபோது இன்னும் கூடுதலாக கொடுக்குமாறு கூறினாராம்.
அதனால் இப்போது லட்சுமிமேனன் கேட்காமலேயே ஜெயம்ரவிக்கு ஜோடியாக அவர் நடித்து வரும் மிருதன் படத்தில் லட்சுமிமேனனுக்கு 40 லட்சம் சம்பளம் பேசியுள்ளனர். அட்வான்ஸ் பண்ணும்போதே 25 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டதாம். படத்தில் நடித்து முடிப்பதற்குள் மீதமுள்ள 15 லட்சமும் கொடுக்கப்பட்டு விடுமாம். ஆக, இந்த படமும் வெற்றி பெற்று விட்டால் அடுத்து கமிட்டாகும் படத்தில் லட்சுமிமேனனின் சம்பளம் 50 லட்சமாகி விடும் என்கிறார்கள். லட்சுமிமேனனின் இந்த அதிரடி சம்பள உயர்வைப்பார்த்து குறைவான சம்பளத்தை வாங்கிக்கொண்டு கிராமத்து கதைகளில் அதிகமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா உள்ளிட்ட நடிகைகள் தாங்களும் சம்பளத்தை உயர்த்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.