Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக் சுப்புராஜ் கதையில் நடிக்க மறுத்த அஜீத்-விஜய்!

20 நவ, 2015 - 14:27 IST
எழுத்தின் அளவு:
Vijay---Ajith-says-no-to-Karthik-subburaj-film

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த இரண்டு படங்களுமே ஹிட்டானது. முதல் படம் விஜயசேதுபதிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது போன்று இரண்டாவது படம் அப்படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதோடு தேசிய விருதினையும் வாங்கிக்கொடுத்தது. இதனால் கார்த்திக் சுப்புராஜ் மீது திரையுலகில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவானது. முன்னணி ஹீரோக்களே அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர்.


இந்த நிலையில், தற்போது இறைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவரது முதல் இரண்டு படங்களிலும் நடித்த விஜயசேதுபதி, பாபி சிம்ஹாவுடன் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு கவர்ச்சி நாயகி என்கிற இமேஜில் சிக்கியுள்ள அஞ்சலி, இந்த படத்தில் முழு பர்பாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆக, கார்த்திக் சுப்புராஜின் இந்த இறைவி படமும் அதில் நடித்துள்ள நடிகர் நடிகைகளுக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுக்கும் என்று தெரிகிறது.


மேலும், இதன்பிறகு அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப் பட்ட கார்த்திக் சுப்புராஜ், அஜித்திற்கு ஒரு கதையை ரெடி பண்ணி அவர் வேதாளம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சொல்லியிருக்கிறார். ஆனால், எப்போதுமே படத்தின் அவுட்லைன், ஓப்பனிங், க்ளைமாக்ஸ் பற்றி மட்டுமே முதலில் கேட்கும் அஜித், தனது பாணியிலேயே கதை கேட்டிருக்கிறார். ஆனால், அந்த கதை அஜித்தின் பாணிக்கு ஏற்ப இல்லாமல், கார்த்திக் சுப்புராஜின் பாணியிலேயே இருந்திருக்கிறது. அதனால் எனக்கு செட்டாகாது என்று சொல்லி நடிக்க மறுத்து விட்டாராம்.


அதையடுத்து, அதே கதையை விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் எப்போதும் தனது ரசிகர்களை மனதில் கொண்டே கதை கேட்கும் விஜய்க்கும் அவர் சொன்ன கதை மீது ஈர்ப்பு வரவில்லையாம். அதனால் அவரும் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி கைவிரித்து விட்டாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in