நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' படம் தயாரிப்பில் இருக்கும் போதே விக்ரம் நடிக்கப் போகும் அடுத்த படம் பற்றிய பேச்சு ஒரு சர்ச்சையாகவே தொடர்ந்தது. 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கப் போகும் அந்தப் படத்தை முதலில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால், விக்ரம் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும், அதனால் ஐங்கரன் பட நிறுவனத்துடன் இணையலாம் என்று ஆனந்த் சங்கரை அழைத்துச் சென்றால் என்றும் சொல்லப்பட்டது.
தன்னை 'அரிமா நம்பி' படம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்திய தாணுவை விட்டு விலகி ஐங்கரன் நிறுவனம் பக்கம் வந்தார் ஆனந்த் சங்கர். ஆனால், '10 எண்றதுக்குள்ள' படம் தோல்வியடைந்ததால் அந்த நிறுவனம் ஆனந்த் சங்கர் - விக்ரம் இணைவதாக இருந்த படத்தைத் தயாரிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டது.
தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த விக்ரம், ஆனந்த் சங்கர் ஆகியோரை 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களான ஷிபு தமீன்ஸ், பி.டி.செல்வகுமார் சந்தித்து அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்ததாகத் தெரிவித்துள்ளார்கள். இது பற்றி கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் அதிகம் பேசப்பட்டது. விக்ரம் சம்பளம் மட்டுமே அந்தப் பேச்சில் இழுபறியாக நீடித்து வந்ததாம். கடைசியாக விக்ரம் அவருடைய சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சம்மதித்துவிட்டதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் புதிய படம் பற்றிய அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.