இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
தனது ஒவ்வொரு படங்களுக்குமிடையே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வரை இடைவெளி கொடுத்து வருபவர் சீனுராமசாமி. அந்தவகையில், கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர், அடுத்து விஜயசேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இதில் இடம் பொருள் ஏவல் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தில் அவரது முந்தைய படங்களில் நடித்த விஜயசேதுபதி, விஷ்ணு இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து சீனுராமசாமி கூறுகையில், இந்த இடம் பொருள் ஏவல் படம், நல்ல வாழ்க்கை வாழ அன்பு அவசியமானது. பணம், பொருள் எல்லாமே அதற்கு பிறகுதான் என்று உணர்த்தக்கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் உருவாகியிருக்கிறது. இதில் விஜயசேதுபதி, விஷ்ணு இருவருமே கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக, எனது தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்க வந்தபோது இருந்ததை விட இப்போது இன்னும் பக்குவப் பட்ட தேர்ச்சி பெற்ற நடிகராக இருந்தார் விஜயசேதுபதி. அதேபோல் நீர்ப்பறவையில் நடித்த விஷ்ணுவும் அதன்பிறகு பல இயக்குனர்களின் படங்களில் நடித்து பெரிய அனுபவத்தை பெற்றிருந்தார்.
அதனால், அவர்களை வைத்து வேலை வாங்குவதற்கு ரொம்ப எளிதாக இருந்தது. இந்த படத்திற்காக அவர்கள் இருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதனால் அவர்களின் உழைப்பினால் இடம்பொருள் ஏவல் நல்லதொரு படைப்பாக வளர்ந்துள்ளது. அதோடு, இந்த படம் அவர்கள் இருவருக்கும் தேசிய விருது வாங்கிக்கொடுக்கும் படமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் சீனுராமசாமி.