ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை 1982ம் ஆண்டு வெளிவந்தது. தமிழ் சினிமாவின் டாப் 10 படங்களில் ஒன்று. கமலுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். இந்த படம் அப்போதே சத்மா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை மீண்டும் தமிழில் ரீமேக் செய்யலாமே என்று பாலுமகேந்திராவிடம் கேட்டபோது, "கமல், ஸ்ரீதேவி மாதிரி ஆர்டிஸ்ட் இருந்தால் சொல்லுங்கள் பண்ணலாம். ஊட்டிகூட அன்று இருந்த மாதிரி இல்லை. மூன்றாம் பிறை ஒரு முறைதான்" என்றார்.
ஆனால் தற்போது மூன்றாம் பிறை படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். பிரபல விளம்பர பட இயக்குனர் லாய்ட் பாப்டிஸ்டா என்பவர் இயக்க இருக்கிறார். இதற்காக சத்மா படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பியிடம் இதற்கான உரிமத்தை பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து லாய்ட் பாப்டிஸ்டா கூறியிருப்பதாவது: மூன்றாம் பிறையை ஆங்கிலத்தில் ரீமேக் செய்து உலக அளவில் கொண்டு செல்ல ஆசை. அதற்கான சூழல் இப்போது அமையவில்லை. அதனால் முதலில் இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறேன். இன்றைய இளம் தலைமுறையினருக்கு மூன்றாம் பிறையை காட்ட வேண்டும் என்பதுதான் என் நோக்கம். நடிகர் நடிகைகள் இன்னும் முடிவு செய்யவில்லை. இளையராஜாவிடம் பாடல் டியூன் உரிமையை கேட்டிருக்கிறேன். என்கிறார் லாய்ட் பாப்டிஸ்டா.