தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ''தங்கமகன்'' ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்து தனுஷ், எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் ஷாம்லி ஹீரோயினாகவும், த்ரிஷா நெகட்டிவ் கேரக்டரிலும் நடிக்கிறார்கள். இது ஒரு குறுகிய கால தயாரிப்பு.
இதன் பிறகுதான் தனுஷ் படங்களிலேயே பிரமாண்ட படமாக உருவாக இருக்கிறது வடசென்னை. வெற்றி மாறன் இயக்குகிறார். இதனை இரண்டு பாகங்களாக தயாரிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். முதல் பாகத்தில் அவரது ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வடசென்னை படப்பிடிப்பிற்காக இயக்குனர் வெற்றி மாறன் வடசென்னையின் பல பகுதிகளை படப்பிடிப்புக்காக தேர்வு செய்து வருகிறார். அதன் பர்மிஷன் பணிகளை தனுஷின் டீம் கவனித்து வருகிறது.
வட சென்னை மினி இந்தியா. எல்லா சமூகத்தினரும் இணைந்து வாழும் பகுதி. வறுமையும் உண்டு, கணிசமான பணப்புழக்கமும் இருக்கும். மும்பை போன்று அண்டர்கிரவுண்ட் சமாச்சாரங்களும் அதிகம். வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதன் வடசென்னையை கதை களமாக கொண்டதுதான். ஒரு பைக்கை தொலைத்த ஒரு இளைஞனின் கதை. இது வாழ்க்கையை தொலைத்த இளைஞர்களின் கதை என்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் வருகிற மார்ச்ச மாதம் தொடங்குகிறது. வடசென்னை, மாரி 2, ஒரு இந்திப் படம் நடிப்பது, 3 படங்கள் தயாரிப்பது இதுதான் தனுஷின் 2016ம் ஆண்டின் திட்டம்.