டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா அக்மார்க் கிறிஸ்தவ குடும்பத்து பெண். இயற்பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவில் அறிமுகமானபோது அவரது பெயரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஷாஜி கைலாஷ் நயன்தாரா என்று பெயர் மாற்றினார். 2005ம் வருடம் ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். அவரை தமிழுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் ஹரி. முதல் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்தவர் அதன் பிறகு தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து பில்லா படத்தில் பிகினி வரைக்கும் வளர்ந்தார்.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இன்றைய தேதியில் நயன்தாரா தான். புதுமுக நடிகர்களுடன், இயக்குனர்களுடன் பணியாற்றுவது, பிற மொழிகளில் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கினாலும் சொந்த மொழி மலையாளத்தில் சில லட்சங்களுக்கு நடிப்பது, சொந்த பிரச்னை எதுவாக இருந்தாலும் படப்பிடிப்பு தளங்களில் சின்சியாராக இருப்பது, தன்னை பற்றி வரும் செய்திகளை கண்டுகொள்ளாமல் இருப்பது, என பல பாசிட்டிவான விஷயங்கள் நயன்தாராவை தொடர்ந்து முன்னிருத்தி வருகிறது.
ஷாஜி கைலாஷ் தொடங்கி விக்னேஷ் சிவன் வரை அவரது காதல் கதைகள் நீளமானது. தனது காதல்கள் பற்றி ஒருமுறை ஒரு வார்த்தைகூட அவர் பேசியதில்லை. பேசியதெல்லாம் மீடியாக்கள்தான். சிம்புவை விட்டு பிரிந்து பிரபுதேவாவை காதலித்தபோது அவரை திருமணம் செய்து கொள்ள வசதியாக ஆரிய சமாஜத்தின் மூலம் தன்னை இந்துவாக மாற்றிக் கொண்டார். அதன் பிறகு இந்து கோவில்களுக்கும் செல்லத் தொடங்கினார்.
ஆனால் இப்போது பிரபுதேவாவை பிரிந்து இளம் இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கம்போல நயன்தாரா பேசவில்லை. விக்னேஷ் சிவன் "அது பர்சனல்" என்கிறார்.
இந்த நிலையில்தான் நயன்தரா கடந்த 13ந் தேதி இத்தாலியில் உள்ள கிறிஸ்தவர்களின் புனித நகரான ரோமில் உள்ள வாடிகனுக்கு சென்றார். 15ந் தேதி கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பொதுமக்களுக்கு ஆசி வழங்கியபோது இவரும் போப்பிடம் ஆசி பெற்றார். தனது 31வது பிறந்த நாளை வாடிகனிலேயே கொண்டாடினார். தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து அங்குள்ள புனித ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். வருகிற 26ந் தேதிதான் இந்தியா திரும்புகிறார். வாடிகன் நகரில் இருக்கும் நாளில் அவர் ஞானஸ்தானம் பெற்று மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.