திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
வாகை சூடவா, மெளனகுரு, மாசாணி, அம்மாவின் கைபேசி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் இனியா. கேரளத்து நடிகையான இவர் ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு தடை போட்டிருந்தார். பின்னர் சில படங்களில் கவர்ச்சிக்கும் மாறினார். ஆனபோதும், அவரது மார்க்கெட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், பின்னர் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினார் இனியா. அதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் கிடைக்கத் தொடங்கின.
அந்த வகையில், தற்போது அவர் கைவசம், ஜித்தன்-2, காதல் சொல்ல நேரமில்லை, கரையோரம், வைகை எக்ஸ்பிரஸ் உள்பட தமிழ், மலையாளம், கன்னடம் என்று 10 படங்கள் வரை உள்ளன. இதில் கரையோரம் படத்தில் சிம்ரனுடன் இணைந்து நடித்திருக்கிறார் இனியா. இந்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், கரையோரம் படம் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தில் சிம்ரன், நிகிஷா பட்டேலுடன் நானும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
இதற்கு முன்பு நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தபோதும் இது மாறுபட்ட வேடம். அதனால் இந்த படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் எனது மார்க்கெட்டில் திருப்பம் ஏற்படும். மேலும், இந்த படத்தின் க்ளைமாக்சில் எனக்கும், சிம்ரனுக்குமிடையே ஒரு சண்டை காட்சி உள்ளது. அந்த காட்சியில் சிம்ரனை அடிப்பதற்கு நான் தயங்கினேன். அதையடுத்து சிம்ரன்தான் எனது தயக்கத்தை போக்கி என்னை நடிக்க வைத்தார். அதன்பிறகு அவரை அடிப்பது போன்ற ஷாட்களில் அதிரடியாக நடித்தேன். ஒரு சீனியர் நடிகையுடன் அந்த காட்சியில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்கிறார் இனியா.