பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் 'ரஜினி முருகன்'. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் பல மாதங்களாக படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது. ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் அந்த தேதிகளில் ரஜினி முருகன் படம் ரிலீசாகவில்லை. படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமி பெரும் கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளார். ஒவ்வொரு பிரச்சனையாக பேசி முடித்து, 'ரஜினி முருகன்' படத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். இதனை 'ரஜினி முருகன்' படக்குழுவினர் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினி முருகன் படத்தை யார் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே இந்தப் படத்தை தமிழகம் முழுக்க வெளியிடவிருந்த வேந்தர் மூவிஸ் தற்போது விலகிக்கொண்டுவிட்டது. எனவே மதுரை கோபுரம் பிலிம்ஸ் மூலம் ரஜினி முருகன் படத்தை வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. படத்தைப் பார்த்த பிறகே முடிவை சொல்ல முடியும் என்று அவர்கள் சொன்னதை அடுத்து, நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர்ப்ரேம் பிரிவ்யூ தியேட்டரில் ரஜினி முருகன் படத்தைப் பார்த்தனர் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இன்னும் தங்களின் முடிவை சொல்லவில்லை என்பதே தற்போதைய நிலவரம். எனவே ரஜினி முருகன் டிசம்பர் 4 அன்று வெளியாவதில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.