ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக திரையுலகில் உலா வரும் நயன்தாராவுக்கு இன்று(நவ.18) 32வது பிறந்தநாள். தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்துவரும் 'புதிய நியமம்' படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை இன்று மம்முட்டி மற்றும் படக்குழுவினருடன் கொண்டாடினார் நயன்தாரா. சொல்லப்போனால் படப்பிடிப்புக்கு வந்த நயன்தாரா, படக்குழுவினர் கேக்குடன் தயாராக தனக்கு வாழ்த்து சொல்ல நின்றிருந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சியில் திளைத்தார். மம்முட்டி உட்பட அனைவரும் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பொதுவாக நடிகைகளுக்கு வயது ஏற ஏற மவுசு குறையும். ஆனால் நயன்தாராவுக்கோ நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே போகிறது. அதிலும் இந்த வருடம் நயன்தாராவுக்கெனவே எழுதிக்கொடுக்கப்பட்டது போல பாஸ்கர் தி ராஸ்கல், தனி ஒருவன், மாயா, நானும் ரௌடி தான் என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து இப்போதும் தான் தான் நம்பர் ஒன் என நிரூபித்துள்ளார் நயன்தாரா. சமீபகாலமாக காதல் பற்றிய கிசுகிசுவில் சிக்கியுள்ள நயன்தாரா, அடுத்த பிறந்தநாளுக்குள்ளாவது கல்யாண செய்தி சொல்வார் என்கிற எதிர்பார்ப்புடன் அவருக்கு நம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.