ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடித்த ''தனி ஒருவன்'' திரைப்படம் சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. இப்படத்தில் வில்லனாக மட்டுமில்லாமல் மற்றுமொரு நாயகனாகவும் நடித்திருந்த அரவிந்த் சாமிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. நடிகர் ஜெயம் ரவி வேடத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கவுள்ளார். நடிகர் அரவிந்த் சாமி தெலுங்கு ரீமேக்கிலும் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகின்றது. இப்படத்தை தெலுங்கில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார். இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க அரவிந்த் சாமி ரூ.3 கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் என்.வி.பிரசாத் ஆகியோர் அரவிந்த் சாமியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அரவிந்த் சாமி சம்பள விசயத்தில் இறங்கி வரவில்லை எனில் வேறு நடிகரை அணுகவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.