ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை நித்யா மேனன் கன்னட நடிகர் சுதீப்பை காதலிப்பதாக கூறப்படும் இந்த நேரத்தில் நித்யா தன் காதல் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: எல்லோரையும்போல எனக்கும் காதல் வந்திருக்கிறது. அது எனது 18 வயதில். உண்மையில் நான் தீவிரமாக காதலித்தேன். திருமணம் செய்து கொண்டு அவரோடு வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரின் சுயரூபம் தெரிந்ததும் விலகி விட்டேன். அதன் பிறகு எனக்கு யார் மீதும் காதல் வரவில்லை. என் மனதை கவரும் ஒருவரை அதன் பிறகு சந்திக்கவில்லை.
என்னை திமிர் பிடித்தவள் என்கிறார்கள். நான் எப்போதும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகியே நிற்பேன். அதை திமிர் என்றால். அந்த திமிர் இருந்துவிட்டு போகட்டும். என் உயரக்குறைவு பற்றி கிண்டல் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். கிண்டல் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்பதை மட்டும் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் நித்யா மேனன்.