டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகில் எத்தனை கிளாமர் நடிகைகள் வந்தாலும் பலருக்கும் நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற அஞ்சலி, ஸ்ரீதிவ்யா, நந்திதா போன்ற நடிகைகள் மீது தனி பாசம் இருக்கத்தான் செய்யும். இன்றைய ரேவதி, சினேகாக்களாக பெயர் எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அஞ்சலிக்கு அப்படி ஒரு பெயர் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. அவரது சொந்தப் பிரச்சனையில் அந்தப் பெயரை அவரே கெடுத்துக் கொண்டார். இருந்தாலும் மீண்டும் 'சகலகலா வல்லவன்' படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆகலாம் என நினைத்தார், படம் தோல்வியடையவே அந்த ரீ-என்ட்ரி வெற்றிகரமாக முடியவில்லை.
அஞ்சலி அடுத்து நாயகியாக நடித்து முடித்துள்ள 'மாப்பிள்ளை சிங்கம்' படம் முடிவடைந்து சில மாதங்களாகியும் இன்னும் வெளிவராமலே உள்ளது. இதோ, அதோ என படத்தை இழுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தப் படம் மீதும், இதை விட கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'இறைவி' படத்தின் மீதும் அஞ்சலி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறாராம். தமிழில் அஞ்சலியை அறிமுகப்படுத்திய ராம் இயக்கத்தில் 'தரமணி' படத்திலும் அஞ்சலி நாயகியாக நடிக்கிறார். எப்படியும் இந்த மூன்று படங்களும் தமிழில் தன்னை கரை சேர்த்துவிடும் என்று நம்புகிறார். விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்த 'மதகஜ ராஜா' படமும் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.
அதனால், அஞ்சலி அடுத்து ஒரு ரவுண்ட் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்தான்.