ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர்கள் சரத்குமார், ராதாரவியின் தலைமையிலான பழைய நிர்வாகம், நடிகர் சங்க அறக்கட்டளையின், மூன்று ஆண்டு கணக்கு; நடிகர் சங்கத்தின், இரண்டு ஆண்டு கணக்கை
சமர்ப்பிக்கவில்லை. எனவே, நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியவில்லை என, கூட்டுறவு சங்க பதிவாளருக்கு கடிதம் மூலம், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலர் விஷால் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கோலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது: நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணி வெற்றி பெற்றது. புதிய நிர்வாகிகளிடம், நடிகர் சங்கத்தின் ஆவணங்கள், வரவு - செலவு கணக்கு புத்தகங்கள், நடிகர் சங்க உறுப்பினர் சம்பந்தமான விவர புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டன. கணக்கு புத்தகங்களை சரிபார்க்கும் பணி, சிறப்பு தணிக்கை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய்க்கான வரவு - செலவு ரசீதுகள் இல்லாதது, தணிக்கை குழுவில் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி, சங்கத்தின் கணக்குகளையும், அறக்கட்டளை கணக்குகளையும், 3,139 பொதுக்குழு உறுப்பினர் முன்னிலையில் தாக்கல் செய்ய வேண்டும் என, புதிய நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து, கூட்டுறவு சங்க பதிவாளருக்கு, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலர் விஷால், ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
அக்., 18ல், நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின், ஒரு மாதத்திற்குள் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாமல் இருப்பதற்கு பழைய நிர்வாகம் தான் காரணம். நடிகர் சங்க அறக்கட்டளையின், மூன்று ஆண்டு கணக்கு; நடிகர் சங்கத்தின், இரண்டு ஆண்டுக்கான வரவு - செலவு கணக்கு, ஆடிட்டரால் தணிக்கை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தரவில்லை. மேலும், 2014 - 15க்கான ஆண்டறிக்கையையும் சமர்பிக்கவில்லை.அதனால் தான், நாங்கள் உடனடியாக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியவில்லை. தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுக்கான ஆவணங்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின், பிப்ரவரிக்குள் பொதுக்குழுவை கூட்டுவோம். இவ்வாறு கடிதத் தில் கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளரிடம், நடிகர் விஷால் புகார் அளித்து இருப்பது, பழைய நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.இவ்வறு,கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.