தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு என்ட்ரி கொடுத்தவர் நஸ்ரியா. அவர் நடித்து வெளியான நேரம் படம் அவருக்கு தமிழில் நல்லதொரு என்ட்ரியை கொடுத்தது. அதனால் வந்த வேகத்திலேயே தனுஷ், ஆர்யா, ஜெய் என முன்னணி ஹீரோக்களின் படங்களாக கமிட்டாகி அடுத்தபடியாக அஜீத், விஜய் என்று மேல்தட்டு ஹீரோக்களுக்கும் ஜோடியாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனுசுடன் அவர் நடித்த நய்யாண்டி படத்தில் என் அனுமதியின்றி என்னை கவர்ச்சியாக காண்பித்துவிட்டனர் என பிரச்னை கிளப்பினார்.
அதையடுத்து ஒட்டுமொத்த கோடம்பாக்க டைரக்டர்களும் நஸ்ரியாவை ஏறக்கட்டினர். அதன்பிறகு மீண்டும் தாய்மொழியான மலையாளத்துக்கே சென்ற நஸ்ரியா, பஹத்பாசிலுடன் ஒரு படத்தில் நடித்தபோது காதல்வயப்பட்ட வர். பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் நடிக்க விரும்பிய நஸ்ரியா, தனது விருப்பத்தை பட்டும் படாமலும் வெளிப்படுத்த, சில டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்ல வரிசைக்கட்டி விட்டார்களாம்.
ஆனால் இந்தசேதி பஹத்பாசிலுக்கு தெரியவர அதிர்ச்சியடைந்து விட்டாராம். அதோடு அவரது குடும்பத்தாரும் கொந்தளித்து விட்டார்களாம். விளைவு, மீண்டும் நடிக்க ஆசைப்பட்டால் குடும்பத்தில் பூகம்பம் வெடித்து விடும் என்று நடிப்பு ஆசைக்கு அணைபோட்டு விட்டாராம் நஸ்ரியா.