‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல நடிகர்களின் படங்கள் எவ்வளவு வசூல் ஆகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களுக்கு உண்டு. அதே அளவிற்கு தங்கள் நடிகர்களின் சம்பளங்களைப் பற்றி அதிகம் பேச மாட்டார்கள். தற்போது ஒவ்வொரு முன்னணி நடிகரும் சுமார் 20 கோடி வரை சம்பளம் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவைப் பொறுத்த அளவில் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். ஆனால், அவருடைய சரியான சம்பளம் எவ்வளவு அவரை வைத்து படம் தயாரித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அதே போலத்தான் மற்ற நடிகர்களுக்கும், ஆனாலும், விஜய், அஜித் ஆகியோர் சுமார் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போது அவர்களின் சம்பளத்தை தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தன்னுடைய அடுத்த படத்திற்கு சம்பளவம் பேசியுள்ள என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள புதிய படத்திற்கு மகேஷ் பாபுவுக்கு 25 கோடி ரூபாய் சம்பளமாகப் பேசியுள்ளார்களாம். இந்தப் படத்தை இயக்க உள்ள ஏ.ஆர்.முருகதாஸுக்கும் அவர் இதற்கு முன் வாங்கிய சம்பளத்தை விட மிகப் பெரும் சம்பளம் பேசியுள்ளார்களாம்.
படத்தில் நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வரையில் சம்பளத்திற்கே சுமார் 50 கோடி வரையிலும் தயாரிப்புச் செலவாக சுமார் 70 கோடி வரையிலும் ஆக மொத்தம் 120 கோடி ரூபாய் செலவு செய்து அந்தப் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளார்களாம். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.