இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ஒருவார இடைவெளியில் தொடர்ந்து 'சால்ட் மேங்கோ ட்ரீ' மற்றும் 'அனார்கலி' என தான் நடித்த இரண்டு படங்கள் ரிலீசான உற்சாகத்தில் இருக்கிறார் மலையாள நடிகர் பிஜுமேனன். கதாநாயகன், கேரக்டர் ரோல் என இரண்டு அவதாரங்கள் காட்டும் பிஜூமேனன் வில்லன் வேடங்களில் தற்போது ஆர்வம் காட்டுவதில்லை. தனது சினிமா வாழ்க்கை திருப்திகரமாக எந்த சிக்கலும் இல்லாமல் சென்றுகொண்டிருப்பதற்கு காரணம் தனது மனைவி சம்யுக்த வர்மா குடும்ப பொறுப்புகளை தன்வசம் இழுத்துப்போட்டுக் கொண்டதுதான் என்கிறார் பிஜுமேனன். ஆம்.. 'தென்காசி பட்டணம்' நாயகியான நடிகை சம்யுக்த வர்மா தான் இவரது மனைவி.
மொத்தமே 18 படங்கள் மட்டும் நடித்துள்ள சம்யுக்த வர்மா, திருமணத்திற்கு பின் நடிப்பதை விட்டுவிட்டு குடும்பத்தலைவியாக மாறிப்போனார். அதன்பின் அவருக்கும் நடிப்பதில் ஆர்வம் இல்லாதது ஒருபுறம் என்றாலும், தனது குடும்பத்தை கவனிப்பதற்கு முதலிடம் கொடுத்ததும் முக்கிய காரணம். அதனால் தான் ரஜினியுடன் 'பாபா' படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது கூட அதை தைரியமாக மறுத்தார். பிஜுமேனன், சம்யுக்தா இருவருமே நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான், “என் மனைவிக்கு மிடில் கிளாஸ் வாழ்க்கைமுறை தான் பிடித்திருக்கிறது. புகழ் வெளிச்சம் தன்மீதும் குடும்பத்தின் மீதும் விழுந்துவிடக்கூடாது என கவனமாக இருக்கிறார் சம்யுக்தா” என மனைவிக்கு சர்டிபிகேட் கொடுக்கிறார் பிஜூமேனன்.