தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு சினிமாவின் மெகா சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி, ப்ரஜா ராஜ்ஜியம் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியல் பிரவேசம் மேற்கொண்டவர், பின்னர் அந்த கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் இணைந்தார். ஆனால், கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு, அவருக்கு மறுபடியும் சினிமாவில் கோலேச்ச வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. அப்படி மறுபிரவேசம் செய்யும் அந்த படம் தனது 150 படம் என்பதால் அந்த படத்தை மெகா பட்ஜெட்டில் ஒரு மெகா டைரக்டரை வைத்துதான் இயக்க வேண்டும் என்று நினைத்த சிரஞ்சீவி ஆந்திராவிலுள்ள பல முன்னணி டைரக்டர்களை அழைத்து கதை கேட்டார். ஆனால் எந்த கதையும் அவர் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை.
அதனால் தனது மகன் ராம்சரண்தேஜா நடிக்கும் புருஸ்லீ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க முடிவெடுத்த சிரஞ்சீவி அந்த படத்தின் க்ளைமாக்சில் ஒரு காட்சியில் தோன்றி கதாநாயகி ராகுல்ப்ரீத்சிங்கை வில்லன்களிடமிருந்து காப்பாற்றும் ஒரு காட்சியில் நடித்தார். அவர் என்ட்ரியாகும் காட்சியை ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவது போன்று படமாக்கினார்கள். ஆனால் சிரஞ்சீவி நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடிக்கும் படம் என்பதால் அவருக்காகவே அந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் தோல்வியை தழுவியது.
இருப்பினும் தான் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்காத சிரஞ்சீவி, தனக்காக சொல்லப்பட்ட கதைகள் எதுவும் பிடிக்காததால் இப்போது ரீமேக் படங்களில் நடிக்கும் முடிவுக்கு வந்து விட்டாராம். அப்படி அவர் பார்த்த பல படங்களில் விஜய்யின் கத்தி, அஜீத்தின் வீரம் படங்களும் இடம்பெற்றுள்ளதாம். இதில் கத்தியை விட வீரம் படம் தற்போதைய தனது இமேஜ்க்கு பொருத்தமாக இருக்கும் என்ற கூறிய சிரஞ்சீவி, வீரம் படத்தில் நடிப்பதற்கான பரிசீலனையில் இருப்பதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.