திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
முன்னாள் குடியரசு தலைவரும், வின்வெளி விஞ்ஞானியுமான அப்துல் கலாம். இன்றைய இளைஞர்களின் ரோல்மாடல். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பல தன்னம்பிக்கை கருத்துக்களை விதைத்து சென்றவர். அவர் சொன்ன கருத்துக்களில் முக்கியமானது இளைஞர்களே கனவு காணுங்கள் என்பதுதான்.
இது தூங்கும்போது வரும் கனவு அல்ல. தூங்கும்போது ஒரு இளைஞன் ஹன்சிகா மோத்வானியை திருமணம் செய்து கொள்வதாக கனவு காண்பான். அப்துல் கலாம் குறிப்பிடுவது அந்த கனவை அல்ல. வாழ்க்கையின் லட்சியத்தை தீர்மானியுங்கள், குறிக்கோளை தீர்மானியுங்கள். என்பதுதான் அதன் பொருள். எனக்கு டாக்டராக வேண்டும் என்பது ஒரு இளைஞனின் கனவு. விஞ்ஞானியாக வேண்டும் என்பது இன்னொரு இளைஞனின் கனவு. இதைத்தான் அவர் குறிப்பிட்டார். தன் கருத்தை பின்னாளில் யாரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் அப்துல் கலாம். உறங்கும்போது கான்பது கனவல்ல. உன்னை உறங்க விடமாமல் செய்வதே கனவு என்று விளக்கம் சொன்னார்.
ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் இளையராஜா பேசியிருக்கிறார். ஈரோட்டில் கவிஞர் மு.மேத்தாவுக்கு விருது வழங்கும் விழா ஒன்றில் இளையராஜா பேசியதாவது...
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மீது மக்களுக்கு இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. இதை அவர் மறைவின் போது தெரிந்து கொண்டேன். தனது வாழ்நாளில் 4 கோடி மாணவர்களை சந்தித்த ஒரே மனிதர் அவர். அவரின் கருத்துக்கள் எனக்கு பிடிக்கும். ஆனால் மாணவர்களை ஊக்கவிப்பதற்காக கனவு காணுங்கள் என்று கூறினார். இந்த கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன்.
கனவு என்பது எல்லோருக்கும் வரும், ஆனால் இந்த கனவைத்தான் காண வேண்டும் என்று யாரும் தீர்மானிக்க முடியாது. கனவில் வரும் காட்சியும் பொய், சம்பவமும் பொய். கனவில் வருவதெல்லாம் நிஜமாவதில்லை. இருப்பினும் நல்ல நோக்கத்திற்காக அந்த கருத்தை அப்துல் கலாம் கூறியிருப்பதால் அவரை போற்றுகிறேன்.
இவ்வாறு இளையராஜா பேசியுள்ளார்.