மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
கிரிக்கெட் போட்டியில் எல்லா நாட்டு வீரர்களும் தனித்தனி அணியாக பிரிந்து நின்று மோதினர் அது ஐபிஎல். அதேபோல இப்போது டென்னிசிலும் சர்வதேச வீரர்கள் விளையாடும் சேம்பியன் டென்னிஸ் லீக் போட்டிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இந்த போட்டிகள் வருகிற 23ந் தேதி முதல் டிசம்பர் 5ந் தேதி வரை இந்தியாவின் பல நகரங்களில் நடக்கிறது. இதில் இந்த ஆண்டு வி சென்னை வாரியர்ஸ் என்ற அணியும் விளையாடுகிறது.
இந்த அணியை நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவும், வேல்ஸ் பல்கலைகழக இணை வேந்தருமான ஐசரி கணேசும் இணைந்து வாங்கி உள்ளனர். வி சென்னை வாரியர்ஸ் அணியின் அறிமுக நிகழ்ச்சியில் பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரபு தேவா, "நான் டென்னிஸ் விளையாடிதில்லை. ஆனால் டென்னிஸ் மிகவும் பிடிக்கும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பேன். வி சென்னை வாரியர்ஸ் அணிக்கு பிராண்ட் அம்பாசிடராகத்தான் இருக்க விரும்பினேன். ஆனால் ஐசரி கணேஷ் சார் என்னையும் உரிமையாளராக்கி விட்டார். டான்சரா, டைரக்டரா, புரட்யூசரா எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணிய மக்கள் இப்போது விளையாட்டு துறையிலும் நான் நுழைந்திருப்பதை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். என்றார்.