பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் நாயகி படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் முழு அலங்காரத்தில் கத்தியுடன் தோன்றும் த்ரிஷாவின் மிரட்டலான புகைப்படங்கள் வெளிவந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் மெடக் மாவட்டத்தில் உள்ள ஜகீராபாத் எனும் இடத்தில் நடைபெறுகின்றது. இங்கு படப்பிடிப்பு நடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் த்ரிஷாவைக் காண படையெடுத்து விட்டனராம். ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு சூழ்ந்து கொண்டு படப்பிடிப்பை பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரம் செய்வதைக் கண்டு அதிசயித்த த்ரிஷா அவர்கள் முன் நடிப்பகற்கு பதட்டமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் படப்பிடிப்புற்கு எவ்வித தொந்தரவும் செய்யாமல் படப்பிடிப்பை பார்த்து ரசித்தது மகிழ்ச்சி அளித்ததாக கூறியுள்ளார். அத்துடன் ரசிகர்களின் ஒத்துழைப்பிற்கு த்ரிஷா நன்றியும் தெரிவித்துள்ளார்.