ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் |
சிம்புவை வைத்து 'போடா போடி' படத்தை இயக்கி அந்தப்படம் தோல்வியடைந்ததினால் மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு நானும் ரௌடிதான் பட வாய்ப்பு பெற்றார் விக்னேஷ் சிவன்.
தனுஷ் தயாரிப்பில், விஜய்சேதுபதி, நயன்தாரா இருவரையும் முதன் முதலாக ஜோடி சேர்த்து விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரௌடிதான்' படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது.
தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
அவரது இசையில் உருவான தங்கமே என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த வருடங்களில் வெளியான பல படங்கள் வெற்றியை தராமல் தோல்வியடைந்துவந்த நிலையில் 'நானும் ரௌடிதான்' அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
பல வருட போராட்டத்துக்கு பலன் கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன், தன்னுடைய படம் நேற்று 25-ஆவது நாளை தொட்டுள்ள நிலையில் கடவுளுக்கும் நயன்தாரா, அனிருத், தனுஷ், விஜய்சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் ஆகியோருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
'நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான ஊடகங்களை மறந்துவிட்டார் விக்கி.
தியேட்டரில் காசு கொடுத்து படம் பார்த்த ரசிகர்களையும்தான்.