டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமான வினய், அதன்பிறகு ஜெயம்கொண்டான், மோதிவிளையாடு, மிரட்டல், என்றென்றும் புன்னகை, அரண்மனை என பல படங்களில் நடித்தார். அரண்மனை ஹிட்டுக்கு பிறகு இருவர் உள்ளம், ஆயிரத்தில் இருவர், ஆள் அம்பு சேனை போன்ற படங்களில் கமிட்டாகி நடித்தார். இதில் எப்போதோ படப்பிடிப்பு முடிந்து விட்ட இருவர் உள்ளம் படம் இன்னும் வியாபாரம் ஆகவில்லை. சேனல் ரைட்ஸ் கொடுக்கலாம் என்று நினைத்த நேரத்தில் சிறிய நடிகர்களின் படங்களை எந்த சேனலும் வாங்க முன்வரவில்லை. அதனால் இருவர் உள்ளம் கிடப்பில் கிடக்கிறது.
அதன்பிறகு சரண் இயக்கத்தில் நடித்த ஆயிரத்தில் இருவர், ஆள் அம்பு சேனை படங்களும் பைனான்ஸ் பிரச்சினையில் கிடப்பதால் அடுத்து படவாய்ப்பில்லாமல் இருக்கிறார் வினய். இந்த நிலையில், இப்படி இன்னும் சிறிது காலம் போனால் சினிமா உலகமும், ரசிகர்களும் தன்னை மறந்தே விடுவார்கள் என்று பயப்படும் வினய், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை படத்தில் அவருக்கு நண்பராக நடித்தது போன்று அடுத்து நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதனால், தனது நட்பு வட்டார ஹீரோ மற்றும் டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார் வினய்.